பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமிடற் றந்தணன்

கடவுளுடைய தன்மையை முடிவு போக யாரும் அறிந்திலர். ஆயினும் அப்பெருமானப் பற்றிச் சமய நூல்களும் ஞானியரும் அன்பர் களும் வெளிப்படுத்தி யிருக்கும் செய்திகள் அளவிறந்தன. கடவுள் ஒருவனே என்ற கருத்தே முடிந்த முடிபாலுைம், மனத்தின் துணேகொண்டு கினைப்பதும் அப்படி கினைத்த தைக் கருவிகளின் துணேகொண்டு செய்வது மாகிய இயல்பையுடைய மக்கள் கடவுளைப் பல உருவங்களே உடையவனுக வைத்து வழிபடு கிருர்கள். பல வீரச் செயல்களையும் அருட் செயல்களையும் உடையவகைப் புகழ்கிருரர்கள்.

சிவபெருமானப் பற்றிய உருவ வருணனை யும் திருவருட் செயல்களைப் பற்றிய செய்தி களும் தேவாரம் முதலிய சைவத் திருமுறை களில் கடல்போல விரிந்து பரந்துள்ளன. ஆயி லும் அந்த நூல்களுக்கு முன்பே, இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, சிவபெருமான் முதலிய கடவுளரைப் பற்றிய செய்திகள் பல தமிழ் காட்டில் வழங்கி வந்தன. இன்று இந்த நாட்டில் சிவபெரு மானுடைய திருக்கோலத்தை எப்படி எண்ணிப்

17