SAMSMeMAMSASAMAAASAAAAASA SAASAASSAAAAAAMASAMAMASAMS AASAASAASAASAASAASAASAASSAAAAAAS SJSMMAAAASASASS SSSS
இன்ப மலே
ASA SSASAS SJSAASASASS بي-....-....-....-....م. . ....-.....-...م
பாடி அலங்காரம் செய்து வழிபடுகிருேமோ, அப்படியே அக்காலத்திலும் வழிபட்டார்கள். சிவபெருமானுடைய வீரச் செயல்களும் அருட் செயல்களும் இன்று வழங்குவன போலவே அன்றும் வழங்கின. பிற்காலத்தில் அவை பின்னும் மிகுதியாக வழங்கலாயின.
எட்டுத் தொகை நூல்களில் ஒவ்வொன் அறுக்கும் கடவுள் வாழ்த்து உண்டு. அவற்றில் பதிற்றுப் பத்தின் கடவுள் வாழ்த்து மாத்திரம் கிடைக்கவில்லை. மற்றவற்றில் ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற நான்கு நூல்களிலும் கடவுள் வாழ்த்தாக அமைந்த பாடல்கள் சிவபெருமானப் பற்றி யவை. தமிழ் நாட்டு மக்கள் திருமால் முதலிய கடவுளரை வேறுபாடின்றி வழிபட்டார்கள். ஆயினும் சிவபெருமானே வணங்குவார் தொகை மிகுதியாக இருந்திருக்க வேண்டு மென்று தோற்றுகிறது.
அகநானூற்றில் வரும் சிவபெருமானைப் பற்றிய வாழ்த்து, பாரதம் பாடிய பெருந்தேவனுர் இயற்றியது. யாவரும் அறியாக தன்மையை யுடைய பழம் பொருளாகிய சிவபெருமா அடைய திருவுருவம், அப்பெருமான் திருக்கரத் தில் ஏந்திய படைகள், அணிந்த ஆடையணிகள் முதலியவற்றை எடுத்துச் சொல்லுகிருரர்.
18