பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ASAAAS AA SAASAASAASAA AAAS AAAAA SAAAAA AAAA SAASAASSAAAASA SSASAS SSMSAMASAASA SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS

காரும் தேரும்

ASMSJSJSAASAASAASAASAASAASAASAASAASAASAAMAMMMMAAA AAAAS AAASASAMMAMAMMAAMMMAAMAJAAJJJSAAAA

கொண்டிருக்கிறது. அதன் கூரிய நுனி விளக்க மாகத் தோன்றுகிறது. இனி மலர்ந்து காடு முழுவதும் முல்லை மணம் கமழப் போகிறது.

கார்காலத்திலே மலரும் வேறு மரங்களும் இங்கே இருக்கின்றன. தேற்ரு மரத்தின் மலர் களும் மலர்கின்றன; மெல்லிய அரும்புகள் - அவிழ்ந்து மலர்ந்து மணக்கின்றன. தேற்ரு வுக்கு இல்லம் என்று ஒரு பெயர் உண்டு. பச்சைக் காம்பையுடைய கொன்றை மலர்களும் மென் பிணி (மெல்லிய அரும்புக் கட்டு) அவிழ்கின்றன. மனமும் நிறமும் வளமும் மென்மையும் உடைய மலர் செறிந்த காட்டுக்கு இப்போது உண்டான அழகே தனிச்சிறப்புடையது. முல்லேயும் தேற்ரு மரமும் கொன்றையும் முன்பே இங்கே வளர்ந் திருந்தாலும், இப்போதுதான் அவை அழகாகப் பூத்துக் குலுங்குகின்றன. செறிந்த தழையும் மலர்ந்த மலரும் நிரம்புவதற்குக் காரணம் கார் காலந்தான். ஆகவே இந்த அழகை அந்தக் கார்காலங்கான் உண்டாக்கியது என்று சொல் வது பிழையாகுமா ? -

காட்டில்ே வாழும் விலங்குகள் பல. முல்லே நில வாசிகளாகிய வில்ங்குகளில் மான்களும் சேரும். கார்காலம் வந்துவிட்டால்:வீட்டிலுள்ள மானனைய மகளிருக்கு மகிழ்ச்சி உண்டா கிறதோ இல்லையோ, காட்டிலுள்ள மான்

67