பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ASAMAAAASASASS எடுக் தேரும்

இங்கே காதலி தன் துயரை வெளிக் காட் டாமல் இருந்தாலும் அவளுடன் நெருங்கிப் பழகும் ஆருயிர்த் தோழிக்கு உண்மை தெரியும். தலைவன் தான் கூறிய உறுதி மொழிப்படியே கார்காலத்தில் வந்து விடுவான் என்ற நம்பிக்கை இருந்தது. ஆகவே கார்காலத்தை அவர்கள் எதிர்நோக்கி யிருந்தார்கள்.

கார்காலம் வந்துவிட்டது. மு ன் ேன சொன்னபடி கவின் பெற்ற கானத்தை உண் டாக்கும் கார்ப் பருவம் வானம் மழை பொழிய வும் ஞாலம் வெப்பத்துக்கு விடை கொடுக்கவும் வந்துவிட்டது. அதைக் கண்டாள் தோழி. அவர்கள் வாழும் ஊர் முல்லை நிலத்து ஊர். ஆகவே கவின் இழந்து வாடிய கானம் இப் போது கவின் பெற்றதைக் கண்ட தோழிக்கு, “ இனித் தலைவர் வந்துவிடுவார்' என்ற மகிழ்ச்சி உண்டாயிற்று.

அதோடு தலைவன் வந்துகொண்டிருக் கிருன் என்ற செய்தியும் அவளுக்குக் கிடைத் கது. இனி அவள் சும்மா இருப்பாளா? தன் தலைவியிடம் ஒடினள்.

அவர் வந்து விட்டார் ’ என்று குதித்துக் கொண்டே சொன்னுள்.

' எங்கே வந்துவிட்டார்?' என்று கேட் டாள் தலைவி.

جمہ، مہی۔ میم

71