பக்கம்:இன்ப வாழ்வு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இன்ப வாழ்வு


பின்பு குடிப்பதற்காகக் கலத்தில் சேமித்து வைத்துக் கொள்ளும் வெந்நீர் மிகச் சூடாகத் தானே இருக்க வேண்டும்? எனவே, இத்தகைய பிச்சையின் பெருமையை என்னென்று பேசுவது?

உலகத்தில் ஊர்தோறும் தெருத்தோறும் வீடுதோறும் பிச்சையேற்று உழல்பவர்களின் எளிய நிலையைக் கண் கூடாகக் கண்டு வரும் நாம் ‘ஒரில் பிச்சை என்ற தொடரைக் கேட்டதும் திடுக்கிடாமல் இருக்க முடிய வில்லை. காரணம், அத்தொடர்மொழி ஈவோர் - ஏற் போர்களின் இயல்புச் சிறப்பினை இனிது விளக்கு கின்றமையேயாகும். எனவே, ஒரில் பிச்சை என்ற தொடரில் உள்ள சிறப்பு நயம் இப்போதுஇனிது புலனாகும். இத்தகைய அரும் பெருஞ் சிறப்பு வாய்ந்த தொடர் மொழியைப் பாடிய புலவர்க்கு இத்தொடர் மொழியினையே பெயராக வைத்து வழங்குவது சாலவும் பொருத்தமாகும் என்பதில் தடையென்ன உள்ளது? எனவே இப்புலவர், ஒரே இல்லில் பிச்சையேற்று உண்டு வாழ்ந்து வந்தவர்; அக்காரணத்தால் இப்பெயர் பெற்றார் என்று விளம்பு வதற்குச் சற்றும் இடமில்லை என்பது வெளிப்படை.

இந்தக் காலத்தில் பிச்சை எடுப்பதை ஒழிக்கும் இயக்கம் வளர்ந்து வருகிறது-அது வரவேற்கத் தக்கது. ஆனால் இந்த இயக்கத்தோடு இந்தப் பாட்டைப் போட்டுக் குழப்பக் கூடாது. இக் குறுந்தொகைப் பாடல் அந்தக் காலச் சூழ்நிலையில் உருவானதாகும்.

மொத்தத்தில், நாய் இல் வியன் கடை’, ‘ஓர் இல் பிச்சை என்னும் தொடர்கள் சிந்தனைக்கு விருந்து!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/123&oldid=550693" இலிருந்து மீள்விக்கப்பட்டது