பக்கம்:இன்ப வாழ்வு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இன்ப வாழ்வு


கொண்டுள்ளன. புருவம் இவ்வாறு கோடாமல்வளையாமல், கண்ணின் நீள் குறுக்கிலே நேர்க் கோடாய் நீண்டிருக்குமாயின், ஏன் - அப்புருவத்தின் வளைவான கோணலை நிமிர்த்திவிடின், அப்புருவத்தின் அடர்ந்த மயிர்ப் பகுதி, திறந்துகாண வொட்டாமல் கண்ணை மறைத்து விடும். அங்ஙனம் மறைத்திருப்பின், அக்கண்பார்வையால் அவன் கலங்கியிருக்க மாட்டான். இதைத்தான், கொடும் புருவம் கோடா மறைப்பின்’ என்றார்.

இந்தப் புருவம் பொல்லாத புருவமாய் இல்லாமல் நல்ல புருவமாய் இருந்திருந்தால், உண்மையில் என்ன செய்திருக்கவேண்டும்? தன் நண்பனாகிய கண்ணைப் பார்த்து, ஏ. கண்ணே! நீ ஏன் அந்த ஆடவனை வருத்து கிறாய்? அது முறையன்று என்றல்லவா கடிந்திருக்க வேண்டும்? அவ்வாறு இடித்துரைப்பதற்கு இதனிடம் நேர்மை யிருந்தால்தானே முடியும்? இதுதான் கோணி யுள்ளதே! கோணல் குணம் (ஒரவஞ்சனை) உடையவர் களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா? அவர்கள் தம் நண்பன் பிறரைத் தாக்கிவருத்துவதைப் பார்க்காத வர்கள்போல் வளைந்து ஒதுங்கித்தான் போவார்கள்! நண்பனுக்கு ஆதரவாகச் சுற்றி வளைத்துத்தான் பேசு வார்கள்! இந்த நயங்களையெல்லாம் அமைத்துத்தான், ‘கொடும் புருவங்கோடா(து) மறைப்பின்’ என்றார். சிறிது இடைவெளி தெரியினும் அதன் வாயிலாக அக்கண் வருத்தும்; ஆதலின் அதனை முற்றும் மறைத்துவிட வேண்டும் என்பதற்காக மறைப்பின் என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/135&oldid=550706" இலிருந்து மீள்விக்கப்பட்டது