பக்கம்:இன்ப வாழ்வு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

135


புருவத்துக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பு வில்லுக்கும் அம்புக்கும் உள்ளது போன்றதாம். புருவ வில்லினின்று கண்ணம்பு பாய்ந்து தாக்குகிறது. அதற்கு ஆற்றாது நடுங்குகிறான் அவன். அதனால்தான் நடுங்கு அஞர் என்றார். (அடுத்த குறளில் ‘ஒ’ என்று அலறி அழவே போகிறான் தலைமகன்) ‘வில் வணக்கம் தீங்கு குறித்தமையான் என்று வள்ளுவர் மற்றோரிடத்தில் கூறி யுள்ளபடி, வில்வளைவின் நோக்கம் பிறரைத் துன்புறுத்தலே. வஞ்சகர் நல்லவர்போல் வளைந்து கொடுப்பதும் பிறகு துன்புறுத்தவே. இந்தக் கொடும் புருவத்தின் கோட்டமும் அதுவேதான். அதனால்தான் அவன் நடுங்குகிறான், என்ன செய்யுமோ என்று!

புருவமும் கண்ணும் ஒன்றுக்கொன்று தோழமை பூண்டு ஒத்துழைப்புடன் செயலாற்றுவதாக இவ்வளவு நேரம் பேசி னோம். இஃது உண்மையா? இஃதோர் இலக்கிய மரபு. அவ்வளவுதான்! இதுபோலவே அம்பிகாபதி கோவையிலும் ஒர் ஒற்றுமைக் கருத்து உள்ளது. ஒருத்தியின் கண்கள் ஒருவனைக் கண்டன. காதல் பிறந்தது. காதலராயினர். பின்னர் பிரிந்தனர். பிரிவு தாளாது தலைவியின் உடல் சோர்ந்தது. கைகள் மெலிந்தன. அதனால் வளையல்கள் கழன்றன. வளையல் இழந்த கைகளைக் கண்கள் கண்டு, ஐயோ நமக்கு மை பூசிய கைகளாயிற்றே! நாம் தலைவனை முதல் முதல் கண்டதனாலல்லவோ இவ்வாறு நேர்ந்தது என்று அழுதனவாம். அதாவது தலைவனைப் பிரிந்த துயரத்தால் தலைவி அழுதாள். அதனை இங்ஙனம் கற்பனை செய்து விட்டார் புலவர். இதனை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/136&oldid=550707" இலிருந்து மீள்விக்கப்பட்டது