பக்கம்:இன்ப வாழ்வு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

153


அரும் பெரும் முயற்சியும் நெருக்கமும் வேண்டும். மேற் கூறிய ஐந்து முயற்சிகளும் ஒருங்கே பெண்ணின்பத்தில் உள்ளன என்பதை, “கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள” என்னும் வேறொரு குறளில் வள்ளுவரே தெரிவித்துள்ளார். இனி நாம் கள்ளுக்கும் காமத்துக்கும் வர இவ்வளவு அடிப்படைக் கருத்துக்கள் போதும்.

கள் போன்ற உணவுப் பொருளைப் பெற்றுத் துய்ப் பதற்கு மிகுதியான துணிவும் ஆற்றலும் முயற்சியும் செலவழிக்க வேண்டும். அதனினும் மிகுதி காமத்துக்கு! அதனால்தான், காமத்துப்பாலில் காமத்தைப் புகழவந்த இடத்தில், கள்ளை அளவு கோலாக வைத்து அதனினும் சிறந்ததாகக் காமத்தைக் கூற நேர்ந்தது. கிட்டத்தட்ட இரண்டையும் ஓர் ஏரில் கட்டலாம் போல் தோன்றினும் இங்கே ஒரு நுட்பம் நோக்கத்தக்கது. ஐந்து முயற்சி களுள், காணுதல் மிகவும் எளிது என்றும், உண்ணுதல் மிகவும் அரிது என்றும், முன்னர் ஆராய்ந்து கண்டிருக் கிறோம். இந்தக் குறளிலோ, உண்டாரை மகிழச்செய்யும் கள்ளைவிட, கண்டாரை மகிழச் செய்யும் காமம் உயர்ந்த தாகப் பேசப்பட்டுள்ளது. இதிலுள்ள உண்மை யாது?

பழைய தமிழ் நூலோர் காம இன்பத்தை உள்ளப் புணர்ச்சி, மெய்யுறு புணர்ச்சி என இரண்டாகப் பிரித் துள்ளனர்:

‘உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும்

கள்ளப் புணர்ச்சியுள் காதலர்க் குரிய

என்பது நம்பியகப்பொருள் நூற்பா. உள்ளப்புணர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/154&oldid=550727" இலிருந்து மீள்விக்கப்பட்டது