பக்கம்:இன்ப வாழ்வு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இன்ப வாழ்வு


அங்ஙனம் பிரியாதிருப்பது நாட்கணக்கில் அல்ல - ஆண்டுக்கணக்கில் அல்ல - என் வாழ்நாள் முழுதுமே அதாவது இந்தப் பிறவி முழுவதிலுமே உன்னை விட்டுப் பிரியமாட்டேன் - இது முற்றிலும் உண்மை!” என்று உறுதி கூறினான். தலைவனது உறுதிமொழியைச் செவி மடுத்த தலைவியின் கண்களை நீர் சுரந்து நிரப்பிவிட்ட தாம். தன்மேல் தலைவன் கொண்டுள்ள பரிவு காரண மாகத் தலைவிக்கு உண்டான அன்புக் கண்ணீர் மட்டு மன்று இது; இந்தப் பிறவியில் பிரியமாட்டேன் என்றால் அடுத்த பிறவியில் பிரிந்து விடுவாரோ என்று ஐயுற்றதனால் உண்டான அச்சக் கண்ணிருமாகும் இது எத்தனை பிறவி எடுத்தாலும் இணை பிரியாது வாழவேண்டும் என்பது தலைவியின் பேரவா!

இந்தப் பிறவியில் பிரியமாட்டேன் என்று சொன்னதின்

மூலம் தன் அன்பின் எல்லையை அறிவித்து விட்டதாக எண்ணித் தலைவன் மனநிறைவு கொண்டான். ஆனால் எத்தனை பிறவி எடுத்தாலும் இணைபிரியக் கூடாது என்று வேண்டிக்கொள்ளும் குறிப்பின் முலம் தலைவனை விட பல படிகள் தாண்டி உயர்ந்து விட்டாள் தலைவி. ஆண் பெண் உறவில் மணிக்கு மணி மாறும் மனமுடைய மாக்களின் மண்டையில் அடிக்கும் சம்மட்டி அடியாகிய இந்தக் கருத்தினை, தலைவன் கூறுவதாக உள்ள.

“இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்ணிறை நீர்கொண் டனள்’ என்னும் விலைமதிக்க வொண்ணாத குறட்பாவால் உணர்ந்து தெளியலாம். இந்த உயர்ந்த கருத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/169&oldid=550743" இலிருந்து மீள்விக்கப்பட்டது