பக்கம்:இன்ப வாழ்வு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இன்ப வாழ்வு


அவர்களை மயக்கிவிட முடியும்? ஆண்கள் கடவுளை வழிபட்டு வீடுபேறு (மோட்சம்) அடைவதற்குப் பெண்கள் இடையூறாக இருக்கிறார்கள் என்று பேசுவது பெரிய கேலிக்கூத்து இந்த அறிவுக்கு ஒவ்வாத கருத்தை இந்தக் காலத்துக் குழந்தையும் ஒத்துக்கொள்ள முடியாது.

‘மங்கைய ராகப் பிறப்பதற்கே-நல்ல

மாதவம் செய்திட வேண்டும் அம்மா! பங்கயக் கைகலம் பார்த்தலவோ-இந்தப்

பாரில் அறங்கள் வளரும் அம்மா!’ என்று இவ்விருபதாம் நூற்றாண்டில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பாடியுள்ளார். பெண்களால்தான் எல்லா அறங்களும் வளருகின்றனவாம். அவர்களை வெறுக்கலாமா? ஆகவே, தலைவனும் தலைவியும் ஒன்றி வாழும் இல்லற வாழ்வினால் அடையமுடியாத நன்மையே இல்லை யெனலாம்.

இன்றியமையாத இன்னொரு செய்தியையும் இங்கே குறிப்பிடவேண்டும். இந்தக் காலத்தில் ஆண்கள் சிலரும் பெண்கள் சிலரும் மணம் செய்து கொள்ளாது தனித்து வாழ்கின்றனர். இவர்களுள் ஒரு சாரார் நாகரிகத்தின் பேராலும், இன்னொரு சாரார் மணந்துகொண்டு தக்கமுறையில் வாழமுடியும் என்ற தன்னம்பிக்கை யின்மையாலும், மற்றொரு சாரார் தம் விருப்பம்போல் உரிமையுடன் வாழமுடியாது என்ற தன்னலத்தினாலும் - இப்படியே இன்னும் சில காரணத் தினாலும் தனித்தே வாழ்கின்றனர். இவர்களது போக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/25&oldid=550755" இலிருந்து மீள்விக்கப்பட்டது