பக்கம்:இன்ப வாழ்வு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

45


பளிச்சிட்ட வெண்ணிறமா யிருப்பதன் காரணமும் வண்டுகளை மயக்கி வரவேற்கும் நோக்கமேயாம். இருட்டு நேரத்தில் வெண்ணிறந்தானே பளிச்சிட்டுத் தெரிந்து பார்ப்பவரைக் கவரும்! இதனை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய மனோன்மணியம் என்னும்

காவியத்திலுள்ள

கிசியலர் மலர்க்கு - - -------- س- --س بیست گاه

வெண்மையும் கன்மணம் உண்மையும் இலவேல் எவ்வணம் அவற்றின் இட்ட நாயகராம் ஈயினம் அறிந்துவக்தெய்திடும்? அங்ஙனம் மேவிடில் அன்றோ காய்தரும் கருவாம்?” என்னும் (மூன்றாம் அங்கம்-நான்காம் களம்) அடிகளால் அறியப் பெறலாம்.

இங்கே நுணுகி நோக்குவோர்க்கு ஒர் ஐயம் எழலாம். அதாவது, முல்லை மலர் ஒன்றில் தேன் அருந்தி மகரந்தப் பொடியும் ஒட்டிக்கொண்ட ஒரு வண்டு, அடுத்தாற்போல் மற்றொரு முல்லை மலருக்கே சென்று அம் மகரந்தப் பொடியைச் சேர்க்கும் என்று எப்படிச் சொல்லமுடியும்? ஏன், அந்த வண்டு அடுத்தாற்போல் ஓர் ஆம்பல் மலருக்கோ அல்லது வேறொரு மலருக்கோ செல்லக்கூடாதா? அங்ஙனம் செல்லின் ஒரு முல்லையின் மகரந்தம் மற்றொரு முல்லையில் சேர்ந்து கருவுறுவது எப்படி? இப்படி ஓர் ஐயம் எழலாமன்றோ? ஆனால் இந்த ஐயத்திற்கு இடமேயில்லை. இது உற்றாய்ந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு முல்லை மலரில் தேன் குடித்த வண்டு, குறைந்தது அரை மணி அல்லது ஒரு மணிநேரம் வரையும் முல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/46&oldid=550777" இலிருந்து மீள்விக்கப்பட்டது