பக்கம்:இன்ப வாழ்வு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S

சுந்தர சண்முகனாரின் நாற்பத்திரண்டாவது வெளியீடான 'இன்ப வாழ்வு முப்பத்தெட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் மலர்ந்த வரலாறாகும்.

தமிழ் இலக்கண இலக்கியங்கள் பற்றி எழுதும் பேசும் ஆட்கள் அருகி வரும் இக்காலச் சூழலில் இந்நூல் வெளி வருவது காலத்தின் கட்டாயமாகும். இல்லற இன்ப வாழ்வு இன்று பல முனைத் தாக்குதலுக்கு உள்ளாகி யிருக்கிறது. இன்பத் துறை பற்றிய இந்நூல் இல்லற இன்ப வாழ்வைப் பேணிப் பாதுகாக்கும் கேடயமாக அமைந்துள்ளது இந்நூலில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கண இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. தமிழாய்வில் தடம் பதித்த பேராசிரியர் சுந்தர சண்முகனார் நூலின் பல இடங்களில் தம் ஆய்வு முத்திரையைப் பதித்துள்ளார்கள்.

இந்நூல் வெளிவரத் தூண்டு கோலாயிருந்த பரமக்குடி அன்பருக்கும் தம் பொருட் செலவில் வெளியிட்ட பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்கட்கும் வெளியீட்டில் உறுதுணையாயிருந்த கடலூர் ‘இலக்கியச் செம்மல் புலவர் வ. ஞானப் பிரகாசம் அவர்கட்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினைக் காணிக்கையாக்குகின்றோம். பேராசிரியர் சுந்தர சண்முகனார் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் பேராசிரியரின் மாணாக்கர்களுக்கும் எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். நூலினைச் சிறந்த முறையில் விரைந்து அச்சிட்டுத் தந்த சிதம்பரம் சுபம் அச்சகத் தாருக்கும் எங்களின் இதயங்கனிந்த நன்றி.

பேராசிரியர் சுந்தர சண்முகனாரின் நூல்களுக்குப் பேராதரவு தந்து வரும் தமிழ் நெஞ்சங்கள் இந்நூலினையும் ஆதரித்திட வேண்டுகிறோம்.

நன்றி! வணக்கம்!

புதுச்சேரி புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம் 20–10–2003 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/7&oldid=550803" இலிருந்து மீள்விக்கப்பட்டது