பக்கம்:இன்ப வாழ்வு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

85


கூறினாய். உன் சொந்தக்காரர் இருக்கும் மலைகள் எவை எவை என்று எடுத்துச்சொல் பார்ப்போம்” என்றாள் வல்லி

பின் குறவஞ்சி தன் சொந்தக்காரர்களின் மலைகளை யெல்லாம் சொல்லத் தொடங்கிவிட்டாள்.

குற: கேள் அம்மே சொல்கிறேன். எனக்கு இளைய செல்லி மலை எது தெரியுமா?

‘கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே: வல்லி. அப்படியா! உன் கணவன் மலை? குற: கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை

அம்மே” வல்லி: உன் தந்தை மலை? தமையன் மலை? குற: “எல்லுலவும் விந்தைமலை எங்தைமலை அம்மே!

இமயமலை என்னுடைய தமயன்மலை அம்மே!” குற எம் மாமிமலையும் தோழிமலையும் கேள்!

சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே! தோழிமலை நாஞ்சில்காட்டு வேள்விமலை அம்மே!’ வல்லி: ஓ அப்படியா! உங்கள் கொள்வனை கொடுப்பனை எப்படி? குற: கேளம்மே! . ஒருகுலத்தில் பெண்கள் கொடோம் ஒரு குலத்தில்

கொள்ளோம் உறவுபிடித் தாலும் விடோம் குறவர்குலம் நாங்கள்’ வல்லி. அப்படியென்றால் உங்கள் மருவினருள் (சம்பந்திகளுள்) ஒருவரைக் கூறு கேட்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/86&oldid=550817" இலிருந்து மீள்விக்கப்பட்டது