92
இன்ப வாழ்வு
சிங்கி சொல்லுகின்றாள்: ‘கொத்தார் குழலார்க்கு வித்தாரமாகக்
குறிசொல்லப் போனனடா சிங்கா குறிசொல்லப் போனனடா சிங்கா’ சிங்கன்: அப்படியா! அது இருக்கட்டும். உன் ‘காலுக்கு மேலே பெரிய விரியன் கடித்துக் கிடப்பானேன் சிங்கி கடித்துக் கிடப்பானேன் சிங்கி’ சிங்கி: இது விரியன் பாம்பல்ல'சேலத்து நாட்டிற் குறிசொல்லிப் பெற்ற
சிலம்பு கிடக்குதடா சிங்கா சிலம்பு கிடக்குதடா சிங்கா’ பிறகு சிங்கன் சிங்கியின் இடுப்பைக் காட்டி: “மெல்லிய பூந்தொடை வாழைக்குருத்தை
விரித்து மடித்ததார் சிங்கி விரித்து மடித்ததார் சிங்கி” சிங்கி; இது வாழைக் குருத்தல்ல'நெல்வேலியார் தந்த சல்லாச் சேலை
நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா’ சிங்கன்: ஓகோ சேலையா? இவ்வளவு பேசுவதற்கு நீ எங்கே கற்றுக்கொண்டாயடி?
சிங்கி: ‘பல ஊர் தண்ணீர் குடித்தால் பத்தெட்டும் தெரியும்” என்னும் பழமொழி உனக்குத் தெரியாதா சிங்கா? சரி! நீ இங்கே என்னை எப்படிக் கண்டுபிடித்தாய் சிங்கா?