பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(50)


சிங்கம் சிரித்துக்கொண்டு சுண்டெலியை நோக்கி "நல்லது, ஓடிப்போ " என்றது. சுண்டெலி போய்விட்டது.

சிலநாளைக்குப் பிறகு இந்தச் சிங்கம் வேடன் வலையில் அகப்பட்டுக்கொண்டது. தப்பி ஓட முடியவில்லை. அதனால், காடுமுழுதும் நடுங்கும் படி கர்ச்சித்தது.

அந்தச் சத்தம் கண்டெலியின் காதில் விழுந்தது. உடனே அது வளையிலிருந்து ஓடிவந்து பார்த்தது. தன்னை மன்னித்த சிங்கம் வலையில் அகப்பட்டிருப்பதைக் கண்டது. உடனே தன் பற்களால் வலையை அறுத்துச் சிங்கத்தைத் தப்புவித்தது.