பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

சுந்தர சண்முகனார்



6.3.1 சங்கர புதுவை

“இரவு நண்பக லாகிலென்
பகல் இருளறா இரவாகிலென்
இரவி எண்டிசை மாறிலென்
கடல்ஏழும் ஏறிலென் வற்றிலென்
மரபு தங்கிய முறைமைபேணிய
மன்னர் போகிலென் ஆகிலென
வளமை யின்புறு சோழமண்டல
வாழ்க்கை காரண மாகவே
கருது செம்பொனின் அம்பலத்திலோர்
கடவுள் நின்று நடிக்குமே
காவிரித் திருநதியிலே ஒரு
கருணை மாமுகில் துயிலுமே
தரு வுயர்ந்திடு புதுவையம்பதி
தங்கு மானிய சேகரன்
சங்கரன் தரு சடையன்
என்றொரு தருமதேவதை வாழவே!”

என்பது பாடல். இது, பெருந்தொகை என்னும் தொகை நூலில் 1135-ஆம் பாடலாக உள்ளது. இந்தப் பாடலில் சங்கரனும் அவர் மகன் சடையனும் இடம் பெற்றுள்ளனர். இனிச் சடையன் மட்டும் இடம் பெற்றுள்ள இரண்டு தனிப் பாடல்களைப் பார்ப்போம்:

“மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர்
கைகழுவ நீர்போதுங் காவிரி - பொய்கழுவும்
போர்வேல் சடையன் புதுவையான் இல்லத்தை
யார்போற்ற வல்லார் அறிந்து”

(சடையன் சோழ மன்னனிடத்தில் அலுவல் பார்த்ததும் உண்டாதலால் போர்வேல் சடையன் எனப்பட்டான்.)