பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

111



சித்திரத்துச் செந்தாமரை

உலகியலில் - ஒரு குடும்பத்தில், தந்தை தன் மூத்த மகனுக்கு முதலில் பாகப்பிரிவினை செய்து தந்த உடைமைகளுள் ஒரு பகுதியினைப் பின்னர் இளைய மகனுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறின், மூத்த மகனும் மூத்த மருமகளும் வாளா இருப்பார்களா? போர்க் கொடி உயர்த்துவர் அன்றோ? இந்த அளவுக்கே இது எனில், மூத்த மகனுக்குப் பாகமே இல்லை-எல்லாம் இளைய மகனுக்கே என்று தந்தை கூறின். என்ன நேரும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

உலகில் தந்தை தரும் சொத்தைவிட வேறு எந்த வசதியும் அற்ற மூத்த மகன் ஒருவன், எனக்கு வேண்டா-தம்பிக்கே கொடுத்து விடுங்கள் என்று செல்வானா?

தந்தை தனக்குத் தரினும்-தராவிடினும் இன்ப துன்பம் அற்ற ஒரே மன நிலையில் மூத்த மகன் இருப்பானா? உள்ளத்தைக் காட்டும் கண்ணாடியாகிய முகம் ஒரே நிலையில் இருக்குமா?

மூத்த மகன் ஒருவன், இத்தகைய சூழ்நிலையில் சித்திரத்தில் வரையப்பட்டுள்ள செந்தாமரையைப் போல ஒரு நிலையில் இருந்ததாகக் காப்பியத்தில் கூறப்பட்டுள்ளான். இராமாயணக் காப்பியத் தலைவனாகிய இராமனே அவன்.

இராவணனால் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சீதை, அசோகவனத்தில் இருந்தபோது, பழைய நிகழ்ச்சிகள் பலவற்றை எண்ணி வருந்துகின்றாள்: அவற்றுள் ஒன்று:-

முடி சூடிக்கொண்டு அரச பதவியை ஏற்றுக் கொள்க என்று தந்தை சொன்னபோது இராமனது முகம் எவ்வாறு