பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

115


“பூணியல் மொய்ம்பினன் புனிதன் எய்தவில்
காணிய வந்தனன் என்ன, காவலன்
ஆணையின் அடைந்தவில் அதனை ஆண்தகை
நாண் இனிது ஏற்றினான் நடுங்கிற்று உம்பரே” (60)

வில்லை நாண் ஏற்றினான் என்றால் போதுமா? அதனை வளைத்து முறித்தானா என்பது தெரியவேண்டுமே! மேலும் கூறுகிறாள்: ஒரு நொடி நேரத்தில் வில்லை எடுத்தான்; இதற்கு முன்பே எடுத்துப் பழகிய ஒரு பொறிபோல நாணேற்றி வளைத்து முறித்தான்:

“மாத்திரை அளவில் தான் எடுத்து முன்பயில்
சூத்திரம் இதுஎனத் தோளின் வாங்கினான்
ஏத்தினர் இமையவர்; இழிந்த பூமழை
வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே” (61)

தேவர்கள் பூமாரி பொழிந்தனராம். வில் இற்ற ஒலி கேட்டு அவையே நடுங்கிற்றாம். ஒரு தொடரில் சொல்ல வேண்டிய செய்தியை, சீதையின் ஆவலைத் தூண்டும் முறையில் பல தொடர்களில் கூறியதாக அமைத்துள்ள சுவையான இந்தப் பகுதி ஒரு கம்ப சூத்திரமோ!

ஆசிரிய இராமாயணம்

சீதையின் ஆவலைத் தோழி தூண்டும் இந்தப் பகுதி வால்மீகி இராமாயணத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இது கம்பரின் சுவையான சொந்தப் படைப்பாகவே தோன்றுகிறது. கம்ப இராமாயணம் விருத்தப்பாவால் ஆனது. “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்” எனக் கம்பர் சிறப்பிக்கப் பெற்றுள்ளார்.

தமிழில் ஆசிரியப்பாவால் ஆன இராம காதை (இராமாயணம்) ஒன்று இருப்பதாகத் தெரிகிறது. தொல் காப்பியம் - பொருளதிகாரம் - அகத்திணையியலில் உள்ள