பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

165


என்பது நன்னூல் எழுத்தியல் நூற்பா. இதற்கு மயிலை நாதர் எழுதியுள்ள உரை வருமாறு.

“என், முதனிலை இடைநிலைகட்கு உரியதோர் வழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) எழுத்துக்கள் தம்பெயர்களை மொழியு மிடத்து ஈண்டுச் சொன்ன முறையன்றி, முதலாகாதன முதலாகியும் (இடையில்) மயங்காதன மயங்கியும் வரப்பெறும். எ-று.

வறு. அவற்றுள், லளஃகான் முன்னர் யவவும் தோன்றும்” (தொல் - நூன்மரபு. 24) என்பதனுள், ளகர மெய்ம்முன்னர் லகரம் மயங்கினவாறும், லகரம் மொழிக்கு முதலானவாறுங் காண்க”.

என்பது உரைப்பகுதி லளஃகான் முன்னர் என்பதில் உள்ள லள என்பவற்றை ல்ஸ் எனக் கொள்ளவேண்டும். மொழிக்கு முதலில் வராத லகரம், இங்கே ‘லள ஃகான்’ என மொழிக்கு முதலில் வந்திருக்கிறதாம். லளஃகான் என்பதின் இடையிலுள்ள ‘ள’ (ள்) என்பது ‘ல’ (ல்) என்பதுடன் மயங்கி உள்ளதாம். இனி இந்நூற்பாவுக்குச் சங்கரநமச்சிவாயர் வகுத்துள்ள உரைப்பகுதி வருமாறு.

“எனின் மொழி முதல் ஈறு இடை நிலைகட்கு
ஆவதோர் புறனடை யுணர்-ற்று.”

இ-ள். எழுத்துக்கள் தம் பெயர்களை மொழிந்து நிலை மொழி வழிமொழியாகப் புணர்க்குமிடத்து, எல்லா மொழி முதற்கும், இங்ஙனம் விதித்தனவும் விலக்கியனவுமாகிய எல்லா எழுத்தும் முதலாம்; (இடைநிலை) மயக்கத்திற்கு இங்ஙனம் விதித்தனவும் விலக்கியனவுமாகிய எல்லா எழுத்தும் மயங்கும் என்று சொல்லுவர் புலவர். எ-று.

இங்ஙனம் எல்லா வெழுத்தும் தனித்தனி அதற்கதுவே முதலாக வருமெனவே, ஈற்றிற்கு விதித்தனவும் விலக்கியனவு