பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

சுந்தர சண்முகனார்



உடம்படு மெய்

மணி தீ-தலை என்னும் இ - ஈ ஐ என்னும் ஈறுகளில் முடியும் நிலைமொழிகளின் பின் உயிர் முதல் வருமொழிவரின், இடையில் ‘ய்’ என்னும் மெய் தோன்றும். சே - தே போன்ற ‘ஏ’ ஈற்றுச் சொற்களின் பின் உயிர்வரின், இடையில் ய், வ் என்பவற்றில் ஏதாவது ஒன்று தோன்றும். மற்ற உயிரீற்றுச் சொற்களின் பக்கத்தில் உயிர்வரின் இடையில் ‘வ்’தோன்றும். இந்த ய், வ் என்னும் மெய்கட்கு ‘உடம்படு மெய்’ (இணைக்கிற மெய்) என்று பெயராம். எனவே, மணி x ஓசை என்பதை மணிவோசை என்பது தவறு; மணியோசை என்பதே சரி. பலா இனிது என்பதைப் பலாயினிது எனல் தவறு; பலாவினிது என்பதே சரி.

இது நிற்க,- ஒரு-கரு-பெரு என்பவற்றின் பின் ஆசிரியர், இருள், ஒளி என உயிர் முதல் வருமொழி வரின் ஒரு ஆசிரியர், கரு இருள் பெரு ஒளி எனல் தவறு ஓராசிரியர், காரிருள், பேரொளி எனலே சரி.

கெடுதல் - திரிதல்

இதுகாறும் புணர்ச்சி விதிகளுள், இடையே ஓர் எழுத்து தோன்றி மிகுதலைப் பற்றிப் பார்த்தோம். இனி, இடையே எழுத்து கெடுதல் பற்றியும் திரிதல் பற்றியும் பார்க்கலாம்.

காலொடிந்தது என உடல் மேல் உயிர் ஒன்று தலையும், கல்லுடைந்தது எனத் தனிக்குறிலின் பக்கத்தில் உள்ள ஒற்று இரட்டுதலையும், விளக்கெரிந்தது என ஈருயிர் இணையின் ஓருயிர் கெடுதலையும் முன்பு கண்டோம் மேலும் சில காண்பாம்.

மரம் + வேர்=மரவேர் எனவும், வட்டம் + வடிவம்= வட்ட வடிவம் எனவும் ஈற்று ‘ம்’ மெய் கெடுதல் உண்டு.