இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
198
சுந்தர சண்முகனார்
தமிழ் -- | தெலுங்கு -- | கன்னடம் -- | மலையாளம் -- |
---|---|---|---|
கடை | கட | கடெ | கட |
மலை | மல | மலெ | மல |
கரை | கர | கரெ | கர |
உரல் | ரோலு | ஒரல் | ஒரல் |
கெடு | செடு | கெடு | கெடு |
இலை | எல | -- | -- |
ஐந்து | ஐது | ஐது | அஞ்சு |
யான் நான் | ஏனு, நேனு | நானு | ஞான் |
பத்து | பதி | ஹத்து | பத்து |
பெயர், பேர் | பேரு | ஹெசரு | பெயர் |
பாம்பு | பாமு | ஹாவு | பாம்பு |
குன்று | -- | -- | குன்னு |
கொன்று | -- | -- | கொன்னு |
தின்று | -- | -- | தின்னு |
மகன் | -- | மகனு | -- |
மகள் | -- | மகளு | -- |
மேலே காட்டியவற்றில் உள்ள தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மும்மொழிகளின் இலக்கண நடைச் சொற்கள் ஏறக் குறையத் தமிழ் மொழியின் பேச்சு வழக்கில் உள்ள கொச்சைச் சொற்கள் போல இருப்பதை யாவரும் அறிவர். எனவே, குறிப்பிட்ட ஓர் இலக்கண நடையைப் பின் பற்றாமல், கண்டபடி மொழியைக் கையாளின், ஒரு மொழிச் சொற்கள் பலமொழிச் சொற்களாக மாறும் - அதாவது, பல மொழிகளாகப் பிரியும்; அதனால், மக்கள் பல்வேறு மொழியினராகப் பிரிவர். சேர நாட்டுத் தமிழர்கள் மலையாளிகளாக ஆனமை அறிந்த ஒன்றே.