பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

சுந்தர சண்முகனார்


மலைபடு கடாம் - இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கெளசிகனார்
பெரும் பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங் கண்ணார்.
மணிமேகலை - சாத்தனார்
திருநாவுக்கரசர் தேவாரம் - திருவானைக்காப் பதிகம்
கம்ப ராமாயணம் - கம்பர்
ஒளவையார் தனிப்பாடல்
அம்பிகாபதி காதல் காப்பியம் - சுந்தர சண்முகனார்
தமிழ் இலத்தீன்பாலம் - சுந்தர சண்முகனார்
மொழியியல் கருத்துகள்
ஆங்கிலம் - பிரெஞ்சு - இலத்தீன் - இலக்கணக் குறிப்புகள் சில
தெலுங்கு - கன்னடம் - மலையாளம் - இவற்றின் சொற்கள் சில

பிற்சேர்க்கை
‘ஏ’ - இடைச்சொல்

புதிய கண்டுபிடிப்பு

இது தொடர்பான செய்தியைக் கூற, கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் - நட்புக் கோள் படலத்தில் உள்ள ஒரு செய்யுளை நோக்கிச் செல்லலாம்.

அனுமன் கூறிய சூழ்வுரைகளைத் தன் அறிவுக் கூர்மையால் ஆய்ந்தறிந்த சுக்கிரீவன், அனுமனை நோக்கி, பொன்னைப் போன்றவனே! உன்னையே உடைமையாகப் பெற்ற எனக்கு இயலாதது ஒன்றுமில்லை. இராமனிடம் போவோம் வருக என்று கூறிச் சென்று தனக்குத் தானே ஒத்தவனாகிய இராமனின் தாள் சேர்ந்தான்.