பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

சுந்தர சண்முகனார்


நால் + ஏ + கால் = 4x¼= 1 (ஒன்று) என்னும் பொருள் அது. இங்கே ‘ஏ’ என்பது, பெருக்கல் குறியின் வடிவாய் நின்று, பெருக்கல் பொருளைத் தருகிறது. மற்றும், 4+¼= 4¼ என்னும் பொருளும் இதற்கு உண்டு.

1-9-2 கம்பங் கூழ்

கம்பு + கூழ் = கம்பு + அம் + கூழ் = கம்பங்கூழ் என்பதில், கம்பு - கூழ் என்பவற்றின் இடையில் உள்ள ‘அம்’ என்பதைப் பொருள் அற்ற சாரியையாக எண்ணலாகாது. கம்பால் ஆன கூழ் என மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் ஆக இந்த அம் உள்ளது. இது பொருள் உளளது.

1-9-3 கருப்பஞ்சாறு

கரும்பு + சாறு = கரும்பு + அம் + சாறு = கருப்பு + அம் + சாறு = கருப்பஞ்சாறு, என்பதில், இடையில் உள்ள ‘அம்’ என்பது, கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட சாறு என ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனுமான பொருள் தந்து நிற்கிறது. (நீக்கல் பொருள் உருபு)

1.9.4 வேலங்கிளை

வேல் + கிளை = வேல் + அம் + கிளை = வேலங்கிளை என்பதில், இடையில் உள்ள ‘அம்’ என்பது, வேலமரத்தினது கிளை என ஆறாம் வேற்றுமையின் ‘அது’ உருபுப்பொருளிலும், வேலமரத்தில் உள்ள கிளை என ஏழாம் வேற்றுமை உருபும் (இல்) பயனுமான பொருளிலும் இருப்பதாகக் கொள்ளலாம். ஆக, அம் என்பது வேற்றுமை உருபாகவும் செயல்படுகிறது.

1-9-5 குரங்கின் வால்

குரங்குவால், எலி, வளை என்பன, குரங்கினது வால், எலியினது வளை என ஆறாம் வேற்றுமைத் தொகையாக