பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

சுந்தர சண்முகனார்


“இருவகை நிலத்தின் இயல்வது சுவையே”

என்பது. செயிற்றியனார் ‘சுவை’ என்று கூறியிருப்பது ஒருவகை மிரட்சியைத் தருகிறது. அஃதாவது:- சுவை என்பது, வடமொழியில் உள்ள ‘ரசம்’ என்னும் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். நவரசம் என்னும் வடமொழிச் சொல்லாட்சிதான் ஒன்பது சுவை எனப்படுகிறது. நவரசங்களுள் ஒன்றாகிய சாந்தம் (அமைதி, நடுநிலை) என்பதில் உடலில் எந்த மாற்றமும் இல்லையாதலின் அதை நீக்கி மெய்ப்பாடு எட்டு எனப்பட்டது - எனச் சிலர் கூறுகின்றனர்.

அதாவது, மெய்ப்பாடுகள் எட்டும் வடமொழியிலிருந்து தொல்காப்பியரால் எடுத்து அறிவிக்கப்பட்டதாக அன்னாரால் கூறப்படுகிறது. இக்கருத்தைத் தமிழ் அறிஞர்கள் . சிலர் மறுத்து, தமிழிலிருந்து (சுவை) ரசம் என்னும் பெயரில் மெய்ப்பாடுகள் வடமொழியில் அறிமுகப் படுத்தப்பட்டன எனத் தக்க சான்றுகள் காட்டி நிறுவுகின்றனர். மற்றும், தொல்காப்பியருக்கு முன்பே, தமிழில் மெய்ப்பாடு பற்றிக் கூறும் நூல்கள் இருந்தன என்பதை,

“பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே நானான்கு என்ப்”

என்னும் நூற்பாவில், ‘என்று கூறுவர்’ என்னும் பொருள் உடைய ‘என்ப’ என்னும் சொல் அறிவிக்கும். மெய்ப் பாட்டின் சுருக்கமான அறிமுகம் இந்தக் கட்டுரை.

***