பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

43


“மன்னுதமிழ் விரகர்எங்கள் காழிவேந்தர்
வகுத்தருளால் அமைத்த திரு முறையோர் மூன்றும்,
அன்னவகை வாகீசர் முறையோர் மூன்றும்,
ஆரூரர் உரைத்ததிரு முறைய தொன்றும்,
துன்னவகை ஏழாகத் தொகுத்துச் செய்தான்
தூயமனு எழுகோடி என்ப துன்னித்
தன்னிகரில் திருவருளால் மன்னன் தானும்
தாரணியோர் வீடுபெறும் தன்மை சூழ்ந்தே” (24)

“மந்திரங்கள் எழுகோடி யாதலினால் மன்னுமவர்
இந்த வகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்து...” (28)

என்பன பாடல்கள். திருமுறைகண்ட புராணத்தில், மூவர் தமிழின் தெய்வ ஆற்றல்களும் கூறப்பட்டுள்ளன. சம்பந்தர் தமிழ், எரியிலே வேக வில்லை-வைகை யாற்றில் எதிரேறி வந்தது. அதாவது-மதுரையில் அனல் வாதத்திலும் புனல் வாதத்திலும் வென்றது; திருமயிலாப்பூரில் எலும்பைப் பெண்ணாக்கியது; திருமருகலில் பாம்பு நஞ்சை நீக்கியது. நாவுக்கரசரின் தமிழ் திங்களூரில் நஞ்சை நீக்கியது; கொல்ல வந்த யானையை வணங்கச் செய்தது; கருங் கல்லை மிதிக்கச் செய்தது. சுந்தரரின் செந்தமிழ், அவிநாசியில் முதலையுண்ட சிறுவனை வரவழைத்தது-இவ்வாறு மூவர் தமிழின் ஆற்றல்கள் போற்றப் பெற்றன:

“எரியினிடை வேவாது; ஆற்றெதிரே ஓடும்;
என்புக்கும் உயிர்கொடுக்கும்; இடுநஞ் சாற்றும்;
கரியை வளைவிக்கும் கல் மிதக்கப் பண்ணும்
கராமதலை கரையிலுறக் காற்றுங்காணே” (17)

மூவர் தமிழின் ஆற்றலைப் பரஞ்சோதி முனிவரும் தமது திருவிளையாடல் புராணத்தில் கூறியுள்ளார்:

சிவனைப் பரவையாரிடம் தூது விடுத்ததும், முதலை உண்ட சிறுவனை வரவழைத்ததும், எலும்பைப் பெண்ணாக்