பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

சுந்தர சண்முகனார்


நாள் மாலையே, மறுநாள் காலை பாடப்போகும் பாடல்களை என்னிடம் அறிவித்து ஒப்புதல் பெறவேண்டும். அவ்வாறு தணிக்கை செய்யும் பொறுப்பு என்னிடம் அறிவித்து ஒப்புதல் பெறவேண்டும். அவ்வாறு தணிக்கை செய்யும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சில நாட்களில், பாரதிதாசனார் தமிழ் வாழ்த்துப் பாடலைப் பாடுவதற்கு என்னிடம் ஒப்புதல் கேட்பர். ‘அவன் பாடலைப் பாடக்கூடாது. அவன் நாத்திகன் - அவன் பாடலைப் பாடவே கூடாது’ என்று கண்டிப்பாக நான் மறுத்து விடுவது வழக்கம்.

ஒருநாள் சொற்பொழிவிற்காக நான் வெளியூர் சென்றிருந்தேன்; மறுநாள் காலை வகுப்பு தொடங்குவதற்கு முன் வந்து சேரவேண்டும் எனக் குறிவைத்து விரைவாகக் கல்லூரிக்கு வந்துவிட்டேன். நான் கல்லூரிக்குள் நுழையும்போது குழு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. பாடல்கள் என்னால் தணிக்கை செய்யப்படவில்லை. நான் வந்தபோது இறை வணக்கப் பாடல் பாடிக் கொண்டிருந்தனர்; அடுத்துத் தமிழ் வாழ்த்துப் பாடல் பாடினர். அந்தத் தமிழ் வாழ்த்துப் பாடலைக் கேட்டதும் யான் மெய்ம் மறந்து போனேன்; மயிர்க்கூச்செறிந்து மகிழ்ச்சியில் திளைத்தேன். அந்தப் பாடல், பாவேந்தர் பாரதிதாசனார் இயற்றியதும், இப்போது புதுவை மாநில அரசால் இறைவணக்கப் பாடலாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றுக் கூட்டங்களில் பாடப்படுவதுமாகிய ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்று தொடங்கும் பாடல் தான் அப்பாடல் முழுவதும் வருமாறு:-

“வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரரின் வீரமும் வெற்றியும் நீயே