பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





13. பாரதிதாசன் ஊரும் பேரும்

1. யாதானும் நாடாமால் ஊராமால்

சுப்பிரமணிய பாரதியாருக்கு அணுக்கத் தொண்டரா யிருந்ததால் கனக. சுப்புரத்தினம் என்பவர் ‘பாரதிதாசன்’ என்னும் புனைபெயர் சூட்டிக் கொண்டார். இப்போது அவர் தமது பாடல் சிறப்பினால் பாவேந்தர் என்னும் சிறப்புப் பெயரால் வழங்கப் பெறுகிறார்.

1.1. மந்திர ஆற்றல்

சர் வால்டர் ஸ்காட் (Sir Walter Scott) என்பவர் ஸ்காட்லாந்தில் பிறந்த ஆங்கில மொழி அறிஞர். இவர் பல பாடல் நூல்களும், உரைநடை நூல்களும், நெடுங்கதைகளும் எழுதிப் பெரும் புகழ் பெற்றவர். அந்த நாட்டில் ‘வால்டெர் ஸ்காட்’ என்னும் பெயரைச் சொன்னால் எந்த வீட்டுக் கதவும் திறக்குமாம்.

இதற்கு ஓர் ஒப்புமை கூறப்பட்டுள்ளது. அரேபிய இரவுக் கதைகளுள் (Arabian Nights) ஒன்றான ‘அலி பாபாவும் நாற்பது திருடர்களும்’ என்ற கதையில், ‘திறந்திடு சீசம்’ (Open Sesam or Semamun) என்னும் மந்திர தொடரைக் கூறியதும் கதவு திறந்து கொள்ளுமாம். அந்தத் தொடரைப்போல, வால்டெர் ஸ்காட் என்னும் பெயரும் மந்திர ஆற்றல் பெற்றிருந்ததாம். (Life of Sir Walter Scott-Chapter II by Lockhart).

1.2. சிறப்பு

இதேபோல், தமிழகத்தில் எங்கே சென்று பாரதிதாசன் என்று சொன்னாலும், பாவேந்தர் பாரதிதாசனாருக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. (இதை யான் நேரில் கண்டதும் உண்டு.)