பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

ரசிகமணி டிகேசி


திருச்சி
10.10.46

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

திருச்சி ஜங்ஷனுக்கு செளகரியமாய் வந்து சேர்ந்தோம். ரிடையரிங் ரூமில் படுத்துக்கொண்டோம். காலையில் எல்.எம்.எஸ். மணி அவர்கள் வீட்டுக்கு வந்தேன். எனக்கு முன்னாலேயே எம்.எஸ். சதாசிவம், கல்கி எல்லோரும் டவுண் ஸ்டேஷனில் இறங்கி வீடு வந்து சேர்ந்திருந்தார்கள். சந்திப்பு ஒரே உணர்ச்சிமயமாய் இருந்தது. எம்.எஸ். பட்ட கஷ்டம் எனக்கு ஞாபகம் வந்தது. அவர்களுக்கு எல்லாம் மறந்துபோன மாதிரி இருந்தது. அன்பு எதையும் கரைக்கக்கூடிய சக்தி வாய்ந்ததல்லவா.

பட்டாபி வீட்டுக்குப் போயிருந்தேன். தங்கள் கடிதங்களை வியந்தவண்ணமாய் இருக்கிறார்கள். டிபுடி கலெக்டருக்கு இந்தக் கலை ஆர்வம், செளகர்யகுணம் எல்லாம் எங்கே இருந்து வந்தது என்கிறார்கள். நான் சொன்னேன். தந்தையை முதுகுக்கு மண் காட்ட அருமைக் குமாரத்தி இருப்பதாக.

கச்சேரியானதும் சென்னை போகிறோம். நாளை அங்கிருந்து பம்பாய். நானுந்தான் போக உத்தேசம். மற்றவை பின்பு.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

❖❖❖