பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

141




திருக்குற்றாலம்
தென்காசி
10.6.51

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

30 ஆம் தேதி அனுப்பிய அழகான கடிதம் கிடைத்தது.

ராமாயண விழாவில் மிச்சம் கிச்சம் வையாமல் கம்பரைப் பாராட்டி விட்டீர்கள். எடுத்து விளக்கிய பாடல்கள் எல்லாருடைய உள்ளத்தையும் பரிபூரணமாய்க் கலந்துவிடும். சந்தேகம் என்ன?

நாராயணசாமி பிள்ளை அவர்கள் கம்பர் பக்தர். அவர்கள் இறங்கிப் போனதில் வியப்பில்லை.

'நின்னாவார் பிறரின்றி நீயே ஆனாய்' என்ற பாசுரம் தங்களை ஆட்கொண்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். மிக்க திருப்தி.

எனக்கு உடம்பு மெள்ள மெள்ளத் தேறி வருகிறது. காரில் சிலவேளை கொஞ்ச தூரம் வெளியே போய் வர முடிகிறது. பிச்சுக்குட்டி (வில்லுப்பாட்டு) வந்திருக்கிறார் பார்வதி கலியாணத்தை வில்லுக்கு அழகாய் அமைத்திருக்கிறார். இன்று மாலை Rehearsal நடக்கப் போகிறது. மகாராஜன் ரொம்ப ரொம்பப் பாராட்டி அனுபவிக்கிறார்கள். - -

ராஜேஸ்வரி, குழந்தை, அம்மா எல்லாருக்கும் என் அன்பு.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

❖❖❖