பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

ரசிகமணி டிகேசி




கல்கி
17.10.45

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

அருமைப்புதல்வி ராஜேஸ்வரி 7.10.45 அன்று அனுப்பிய கடிதம் கிடைத்தது. அதற்குப் பதில் இனிமேல்தான் எழுத வேண்டும். எப்பொழுதும்போல அழகாய் உண்மை பொதிந்ததாய் இருக்கிறது கடிதம்.

மேல் நாட்டுப் பேராசிரியர்கள் சொல்லுவார்கள் பெண்டுகள் தான் கடிதம் எழுதத் தகுதி உள்ளவர்கள் என்பதாக, ஆனால் இலக்கியம் என்றாலும் கடிதமாய் விஷயத்தை எழுதுவதுதானே. நான், வாசகர், விஷயம் மூன்றும் ஒன்றுபட்ட முறையில் பேசவேண்டும். அப்போது இலக்கியம் பிறந்து விடுகிறது. இது ஏதோ வேதாந்த ரகசியம் போல ஒலிக்கிறதே என்று தோன்றும், அப்படி ஒன்றும் இல்லை. எழுதுகிறவர், வாசிப்பவர் மனசிலிருந்து கொண்டு எழுதுகிறார் என்றால் இருவரும் சேர்ந்து எழுதுகிறார்கள் என்று சொல்லுவதில் பிகு இல்லை. இனி, விஷயமே பேசுகிறது என்று சொல்லும்போது, தானே சங்கடம் வருகிறது. கடிதத்தில் அடுத்த வீட்டுக் குழந்தையைப் பற்றி எழுதுகிறதென்றால் எழுதுபவருக்கு எவ்வளவு ஆசை குழந்தையிடத்தி லிருக்கிறதோ அவவளவு ஆசையும் வாசிப்பவர் உள்ளத்திலும் ஏறிவிடுகிறது. அவ்வளவு தான். குழந்தை அப்படியே முன்னால் வந்துவிடுகிறது. அப்படி விளையாடும், இப்படி விளையாடும், அதற்குக் கொஞ்சம் காய்ச்சல் குணமாய் விடுகிறது. விளையாடாமல் இரு என்றால் இருக்க மாட்டேன் என்கிறது. இப்படி எல்லாம் குழந்தைத் தெள்ளத்தெளிந்த விதமாக நம் கண்முன் வந்து நின்று காட்சி அளிக்கிறது, குழந்தை பேசுகிறது என்ற விஷயத்தைக் குறித்துச் சொல்லலாம் அல்லவா.

அப்படியேதான் கடிதத்தில் கையாளும் எந்த விஷயமும்,

நமக்குத் தெரியும், நூல்களின் தாரதம்மியத்தைப் பற்றித் தாறுமாறாய்ப் பண்டிதர்கள் பேசுவார்கள் என்பது. கம்பருக்கு