பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


வாழ்க்கையின் வெறுமைக்கு வானவில்லின் வண்ணங்களை அள்ளித் தருவது நமது ஆசை.

-ப.ப

தன் உண்மை நிலையைப் பிறருக்குப் புலப்படுத்தவும், மரியாதை பெறவும் ஒரு வாழ்நாள் முழுவதும் தேவைப் படுகிறது.

-சித்

உன் கூரிய விழிகளை என் கனவுகளில் ஆழமாய்ப் பாய்ச்சுகிறாய்.

-எ

என் கையில் யாரோ அன்பாகிற மலரைக் கமுக்கமாக விட்டுச் சென்றிருக்கிறார்கள்,

-எ

நிரம்பி வழிந்தோடும் இறைவனுடைய இனிமையை அவளுக்கே எவள் எப்பொழுதும் திருப்பிக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறாளோ அவளே என்றும் இளமையுடனும் விளங்கும் அழகி.

-க.கொ

தனது விளையாட்டுப் பொருள்களாகிய பொருளில் லாத முகில்கள், அழிந்து போகக் கூடிய ஒளி. நிழல்களுக்குத் தெய்வீகக் குழந்தை. அதோ புன் முறுவலித்தவாறே நிற்கிறது.

மின்