பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

இரவீந்தரநாத் தாகூர் - எண்ணக் களஞ்சியம்


னது வாழ்க்கையைப் பயனுள்ளதாகச் செய்ததற்காகப் பயன் மரங்களுக்கு நான் நன்றி தெரிவித்திருக்கிறேன். அதே நேரத்தில், மரங்களை என்றும் பசுமை மாறாமல் வைத்திருக்கிற புல்வெளியை நினைவில் நிறுத்திடத் தவறி விட்டேனே.

மின்

னக்கு இணையில்லை என்ற நிலையை ஒருவனது வெறுமை குறிக்கிறது. அதன் மறு பகுதி உண்மை நிலையை உணர்த்துகிறது.

-ப.ப

னித சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளும் ஒருங்கிணைந்திருக்கின்றன என்பதுதான் இன்றைய மிகப் பெரிய உண்மை. நமது சிறந்த பண்பாட்டின் மூலம் இந்தச் சிக்கலைத் தீர்த்து நமது மாந்தத்தன்மையை மெய்ப்பித்துக் காட்டவேண்டும்.

-தே

னைத்திலும் நிறைந்திருக்கும் துயரத்தினூடே என்றும் நிலைத்திருக்கும் அன்னையின் மெல்லிய குரலைக் கேட்கிறேன்.

-ப.ப

ன்பே, என்னை நீ காதலிக்க முடியாவிட்டால் குறையில்லை, எனது துன்பத்தை மன்னித்துவிடு. எட்டி