பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

111


முகத்திரை அணிந்த மணப்பெண்தான் இருட்டு போக்குக் காட்டும் ஒளி தன் நெஞ்சத்திற்குத் திரும்பிட அமைதியாகக் காத்திருக்கிறது அது.

-மின்

ந்த வாயில் வழியாகத் திரும்பிச்செல்ல வேண்டுமோ அதுவே அடைக்கப்பட்டிருக்கும்போது, மகிழ்ச்சி துன்பமாக மாறுகிறது. -சித்

மேலுலகின் காற்று வீசிக்கொண்டிருக்கிறது, நங்கூரம் வெறியுடன் சேற்றினை அணைத்துக் கொள்கிறது. எனது படகு விலங்குடன் உராய்கிறது.

-மின்

வனொருவன் இறைவனைக் கண்டும் தொட்டும் இருக்கிறனோ அவன் எல்லா அச்சத்திலிருந்தும் அவலத்தினிடமிருந்தும் விடுபடுகிறான்.

- க.பா.

கழப்பட்ட மாந்தன் வெற்றிக்காக மாந்த வரலாறு பொறுமையாகக் காத்திருக்கிறது.

-ப.ப.

புனிதமான செங்கதிர் இதயத்திற்காகப் படையல் பொருள்களைக் கொண்டு வா.

-தே