பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


ளியில் நீராடியெழுந்த காலைப் பொழுதுபோல் வெண்ணிற ஆடை உடுத்தி மலர் கொய்யும் உன்னை நான் கண்டேன், நான் கூறினேன் "எனக்கு உதவிட என்னை ஏற்பதின் மூலம் எனக்கு பெருமை அளி"

-நா

மது வாழ்க்கையை அதன் மகிழ்ச்சிகளிலும், துயரங்களிலும், அதன் ஆக்கங்களிலும் தேக்கங்களிலும் அதன் எழுச்சியிலும், வீழ்ச்சியிலும் முழுமையாக விரும்புவதற்கான ஆற்றலை எங்களுக்கு அளி.

-சா

குழந்தாய், காற்றின் நீரின் மழலையையும், மலர்களின் அமைதியான கமுக்கங்களையும், முகில்களின் கனவு களையும், காலை வானத்தின் ஒசையற்ற வியப்பான பார்வையையும் என் நெஞ்சத்திற்கு நீ கொண்டு வருகிறாய்.

-மின்

குழந்தைகள் இறைவனால் விரும்பிப் படைக்கப் பட்டவர்கள்.

-ஆ

நேயத்தில் வேறுபாடு என்கிற உணர்வு அற்றுப் போகிறது. தனக்கென விதித்திருந்த எல்லையைக் கடந்து எல்லையற்ற என்கிற நிலையை எட்டி முழுமை என்கிற தனது உயர்ந்த குறிக்கோளை மாந்த உயிர் அடைகிறது.

-சா