பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


பிறக்கும் நாட்டியம்தான் கூழாங்கற்களுக்கு முழுமை அளிக்கிறது. -ப.ப

இரவு கலைந்திடும், இருட்டு மறைந்திடும். நம்பிக்கையுடனிரு: மனவுறுதியுடனிரு. -சா

துயர மொழிகளையும், மகிழ்ச்சி வாக்குகளையும் கொண்டு வருபவன் என் தலைவனே. இவற்றிடையே தோன்றும் பிணக்குகளையும் அவனே தீர்த்து வைக்கிறான். -க.பா

தனக்கென்று ஒவ்வொன்றையும் பெற்றுக் கொள்வதில் இல்லை மாந்தனின் நிலையான மகிழ்ச்சி. தன்னைக் காட்டிலும் மேம்பட்டவனிடம் தன்னையே அளித்து விடுதலில்தான் அந்த மகிழ்ச்சி கிடைக்கிறது. -சா

முழு உண்மையையும் வெளியிட நீ தயங்குகிற பொழுது, வெளிப்படையாகயிருப்பது எளிதுதான். -ப.ப

உறக்கத்திலிருந்து விழித்தெழு கலக்கத்திலிருந்து விடுபட்டுப் புதுவிடியலின் ஒளியைப் பாடலுடன் அடைந்திடு. -சா