பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


கிழக்கு முகத்தின் தூதுவனாக வந்துள்ள, காலைப் பறவையே, விண்ணின் காரிருளினூடேயும், இலைகளி னுாடேயும், ஊடுருவி எவ்வாறு அவன் உன் கனவில் புகுந்துள்ளான் என்பதைக் கூறிடுவாய்.

-க.கொ

ல்லையற்றதும், எல்லைக்கு உட்பட்டதுமாகிய இரண்டும் ஒன்றுதான். பாடலும், பாடகனும் ஒன்றுதானே.

-ஆ

பேருலகின் உள்ளத்தில் நமக்கு ஓர் இடம் உண்டு என்று விளக்குவதே நமது அரும் பணி.

-ஆ

வெளிச்சத்தின் முதல் வாழ்த்தினைப் பெற, உன் நெற்றியைத் தாழ்த்திக் காத்திரு. காலைப் பறவையுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் பாடு.

-க.கொ

னது உலகத்தில் தவறாகக் காலடியெடுத்து வைத்து, அதையே எனக்கு எதிராகத் திருப்பி விடாதிருப்பேனாக.

-ப.ப