பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

167


ன் தலைவ உன் விண்மீன்களிலிருந்து இறங்கி வருகிற பண்ணிசைப்புகளில் நெஞ்சத்தை எனது வாழ்க்கைத் தந்திகளில் பொழிந்து விடு.

-க.கொ

ன்றாவது ஒரு நாள் வேறொரு உலகத்தின் விடிவெள்ளியில் உனக்குப் பாடுவேன்; நிலத்தின் வெளிச்சத்தில் மனித நேயத்தில் உன்னை முன்பே நான் பார்த்திருக்கிறேன்.

-ப.ப

குயிலுக்குத் தன்பாட்டுத்தான் பொருத்தமாகும். குயில் கிளியைப்போல எதிரொலிப்பது பொருந்தாது.

****

நான் விடை பெற்று செல்லுமுன், திரும்பத் திரும்ப வருகிற சொல்லின் மேல் கவனம் செலுத்தி, அந்த இசையை முற்றிலுமாக நிறைவு செய்வேனாக. உன் முகத்தைக் காண விளக்கைச் சுடர்விடச் செய்வேனாக, உனக்கு முடிசூட்டிட மாலை தொடுப்பேனாக.

-க.கொ

நேற்றைய இரவின் புயல் தனது பொன்மயமான அமைதியினால் காலைப் பொழுதிற்கு முடிசூட்டுகிறது.

-ப.ப

தனக்குள்ளே யாவற்றையும் அடக்கிக் கொள்ளும் நிலையான உண்மை அங்கே இருக்கிறது.

-ஆ