பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


ன் பண் இசையின் அலைகள் உன் அடிகளைக் கழுவுகின்றன. ஆனால் அவற்றை அடைவது எப்படி என்பது தான் எனக்குத் தெரியவில்லை.

-க.கொ

டுவில் புகுந்து அங்கிருந்து வாழ்க்கையாகிற கிளை பரப்பும் மரத்திற்குக் கண்ணுக்குத் தெரியாத ஊட்டமளித்து மலர்களும், கனிகளும் தோன்றச் செய்கிற அன்பை எனக்கு அளித்திடுவாய்.

-க.கொ

ப்புயர்வற்ற ஆவியில் எத்தனை வியப்பான அமைதி உள்ளது என்று கண்டிரு. தகுதியுள்ளவனுக்கே நுகர்வின்பம் கிடைக்கும்.

-க.பா

சோர்வுற்ற காலப் போக்கில் நீ ஈட்டிய செல்வத்தைக் கண்டு களித்தது போதும். எல்லாவற்றையும் கை கழுவி விட்டோம் என்ற பாழ்பட்ட வெற்றிக் களிப்பைத் தவிர எதுவுமே மிஞ்சி நிற்காதபடி அத்தனையையும் செலவிட்டு விடு.

-நா

மது வாழ்க்கை இறைவனின் திருவருள் கொடை யால் நிறைக்கப்பட்டிருக்கிறது.

-ஆ