பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


என் தோழனே, உன் நெஞ்சின் கமுக்கத்தை உனக்குள்ளேயே மூடி மறைத்திடாதே. என்னிடம், என்னிடம் மட்டுமே கமுக்கமாக அதைக் கூறிவிடு.

-தோ

போற்றுதலுக்குரியது என்பது ஒரு பிறந்த குழந்தையே.

-ப.ப

பொதுவான பொருண்மைகளையும், நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியதே இந்த உலகம். அந்த உலகில் அன்பைப் பொழிந்திடவே இறைவன் பெண்ணை அனுப்பியுள்ளான்.

-ஆ

மென்மையாகப் புன்னகை சிந்துகிறாய் நீ, மென்மையாகக் கிசுகிசுக்கிறாய் நீ. என் நெஞ்சம் அதைக் கேட்கிறது, என் காதுகளல்ல.

-தோ

என் காதலியிடம் நான் நிலையாக அளிக்கப்பட்டுள்ளேன் என்பது மட்டும் போதுமானதன்று. அதிலிருந்து நாள்தோறும் புதிது புதிதான பரிசுகளை உருவாக்க வேண்டும்.

-நா