பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


என் அரிய பாடலே, சோர்விலிருந்து எழுந்திடு, பழக்கமான திரையைக் கிழித்திடு, முதன்முதலில் நாம் கூடிய பொழுது அடைந்த மகிழ்ச்சியில் திளைத்தவாறே என் காதலியிடம் பறந்து சென்றிடு! -நா

இசையாகிற என் வலையில் என் அன்பே, நான் உன்னை இழுத்துவிட்டேன், சுற்றி இழுத்து வளைத்து விட்டேன். -தோ

என்னை கிண்ணமாக்கிவிடு; என் முழுமையை உனக்கே உரித்தாக்கிக் கொண்டு விடு. -ப.ப.

உனது ஆசைகளெல்லாம் கடந்தகாலத் தேன் கூட்டிலிருந்து கிளம்பி என் நெஞ்சத்தைக் கிறக்கிவிடவே வருகின்றன. அவற்றின் சிறகுகள் கூறுவதைக் கேட்டிட நான் சிலையாக அமர்ந்து கொண்டேன். -நா

உண்மையையே நான் பேசுகிறேன். வாழ்க்கையில் அதுவே நிலை என்று நான் கண்டு கொண்டேன். வேறு மலிவான பகட்டுகளை ஒதுக்கி விட்டேன். -கா.ப