பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

195


பெரிய தலைவன் இசைக்கிறான். மூச்சுக் காற்று அவனதுதான். ஆனால் அந்த இசைக் கருவி நமது மனம்தான். அதன் மூலமே படைப்பாகிற பாடல்களை வெளிக் கொணர்கிறான். -ஆ

என் உலகில் ஒளி இருந்த நாள்களில் என் கண்களுக்கு வெளியே நீ இருந்தாய். இப்பொழுதோ என் உலகில் ஏதுமில்லை ஆனால் நீயோ என் உள்ளத்துள் புகுந்து விட்டாய். -எ.சு.

எவனோ என் உள்ளத்தைத் திருடிவிட்டான். அதை விண்ணில் சிதறிவிட்டான். -எ

வேனில் நாள்கள் மாறிமாறி வருகின்றன. முழு வெண்ணிலா விடை பெறுகிறது. மறுபடியும் தோன்றுகிறது. ஆண்டுதோறும் மலர்கள் மலர்கின்றன, கிளைகளில் மயங்கி நிற்கின்றன. இப்பொழுது நான் உன்னிடம் பெறுவதும் மறுபடியும் ஒருவேளை உன்னிடம் வருவதற்காகவே என்றே தோன்றுகிறது. -தோ

என் பாடல் உனது கனவுகளுக்கு இரட்டைச் சிறகுகளாக அமைந்து, யாரும் கண்டறியாத புதிய பொன் உலகுக்கு உன் உள்ளத்தை இழுத்துச் செல்லும்.