24
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
இந்த பாழ்நிலப் பகுதியில் எனக்கு வழிகாட்ட உனது காலடியோசையையே நான் நம்பியுள்ளேன்.
****
என்னிடம் உள்ளவற்றையெல்லாம் நான் ஈடு வைப்பேன். என்னிடமுள்ள கடைசிக் காசைத் தோற்கும் போது நான் என்னையே ஈடுவைப்பேன். எனது படுதோல்விக்குப்பின் நான் வென்றுள்ளதாக எண்ணுவேன்.
****
மலை உச்சியில் படர்ந்திருக்கும் பனிப் பாறையை ஞாயிற்றின் முத்தம் கரைப்பது போல், உனது விழிகள் என் நெஞ்சத்தை உருக்குகின்றன.
****
சித்திரை மாதத்தின் மகிழ்வான இரவில் அறிநதிராத அன்பிற்காகக் காத்திருப்பது எவ்வளவு இருண்மை படர்ந்ததோ, அது போன்றே அவன் கருநிறமுடையவன்.
****
நமது மகிழ்ச்சியான நாள்கள் யாவையும் பணச்செல விற்கு வழி வகுத்தவை. -
****
நிலத்தாயே, உன்னிடத்திற்கு நான் வேற்றாளாக
வந்தேன். உன் வீட்டில் ஒரு விருந்தாளியாக வாழ்ந்தேன். உன் வீட்டை விட்டு நண்பனாக வெளியேறுகிறேன்.
****