பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


அன்பின்றி உண்மை கைம் பொண்ணாகிறது.

- த.ஓ

கண்ணித் துளி அல்லது புன்னகைப்போன்று, உள் மனத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பதன் வெளிச்சித்திரம் தான் பாட்டு.

- நினை

தன்னிச்சை இல்லாமலேயே நினைவு கொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கும் மனித ஆற்றலை வழிநடத்தி மனிதனுக்குத் தூண்டுதலாயிருப்பவள் தான் பெண்.

-ப.ஓ

தன்னிடம் கைநீட்டி இறைவன் வரும்பொழுது, மனிதன் தன் செல்வச் செழிப்பை உணர்கிறான்.

- மின்

ஆழம் காணமுடியாத இன்ப ஊற்றிலிருந்து எண்ணற்ற சிரிப்புச் சிதறல்கள் உலகம் முழுவதும் தெறித்துக் கிடக்கின்றன.

- நினை

தன் முகத்திரையை நீக்கியவாறு, ஓசையின்றி அன்பு நடைபோட்டு, நிழல் பணிவுடன் ஒளியைத் தொடர்கிறது.

-ப.ப