பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

35


தன் அன்புக் காதலியின் முகத்தை புதிய முகத்திரை களில் அவள் கண்டிருக்கிறாள்.

ーகா. ப

இடம் விட்டு இடம் பெயரும் பாடல்கள் என்நெஞ்சத்திலிருந்து பறந்து செல்கின்றன. தங்கள் உறைவிடத்தை உன் அன்புக் குரலில் தேடுகின்றன.

- மின்

வருங்காலத்தில் வேனிற்காலம் காதலர் தோட்டத் திற்கு வந்து சேரும்.

- த.ஒ.

உன்னருகே அமைதியாக அமர்ந்திருக்க எனக்கு விருப்பம்தான். ஆனால் அதற்கான துணிச்சல் என்னிட மில்லை. எங்கே எனது உள்ளம் உதடுகளுக்கே வந்து விடுமோ என்ற அச்சம் தான் காரணம்.

- தோட்

அமைதியாக அமர்ந்திருந்து உனது ஒலியற்ற உள்ளுயிரிலிருந்து பிறக்கிற சொற்களைக் கேட்பேனாக.

-எ

மனிதனைச் சுற்றியிருக்கிற உறுதி என்கிற சிறியதீவைச் சூழ்ந்துள்ள இடையூறு ஐயப்பாடு, மறுப்பு என்கிற கடல், அவளை அறிந்திராதவற்றைத் துணிவுடன் எதிர் கொள்ள அறை கூவல் விடுக்கிறது.

- மின்