பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

37


உனக்காக நான் பாடிய பாடல்களுக்காகப் பரி சொன்றும்’ கேட்கப் போவதில்லை நான். அவை இரவுமுழுவதும் வாழ்ந்திருந்தால் போதும், அதிலேயே எனக்கு மன

நிறைவு.

- நா

சீற்ற மின்னல் தன்னுடைய கூரிய நகங்களினால் வானத்தைக் கீறிக் கிழிக்கின்றது.

பப

மெய்யறிவு பெற்றுக் குழந்தைப் பருவத்தை மனிதன் திரும்பப் பெறுவதற்காக இறைவன் காத்திருக்கிறான்.

- பப

நட்புரிமையில் கனவுகளும் நனவுகளும் கைகோர்த்துக் கொள்ளுகிற அந்தப் பகுதியை அவள் அடைந்துவிட்டாள்.

-மு.மு

என்னுள்ளத்தில் வாழ்பவன் மட்டுமே நான் பதித்த உண்மையான வழியே என்னிடம் வர முடியும்.

- மு.மு

முழுமையான நோக்கைப் பெறத் தானாகவே நமக்குஉதவிட முன்வரும் உயிர்க்கருவியே நம்பிக்கை என்பது.ஆனால், நாம் காண்பது என்னவோ துண்டு துக்கடாக்களை மட்டிலுமே.

-எஎ