பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


எனக்கு அன்பு மறுக்கப்பட்டால், காலைப்பொழுது ஏன் தன் நெஞ்ச வேட்கைகளைப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டும்? - -எ

விண்ணெங்கும் பரவி நிற்கும் ஒளி தனது எல்லையைப் புல்லில் படிந்திருக்கும் பனித்துளியில் காண்கிறது. - - மின்

என் நண்பனே, உன்னை நான் நெடுங்காலமாகத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். - -படை

துயரம் நிறைந்த என் வாழ்வில் அழகையும் ஒழுங்கு முறையையும் கொண்டு வா. - -கா. ப

வழி விடு, மொட்டே, வழிவிடு, உன் நெஞ்சத்தைக் கீறி வழிவிடு. - -படை

கனவுகளின் மூலம் மண்ணகம் விண்ணுலகம் படைத்திட காலம் காலமாக வானகம் தன்னை வெறுமையாக வைத்திருக்கிறது. - -மின்