பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இரவீந்திரநாத தாகுர்

உலகப் பெருங்கவிஞர்களில் இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்ப்பவர் இரவீந்திரநாத தாகுர் - இளங்கோ - சீத்தலைச் சாத்தனார் - கொங்குவேளிர் - திரிகூடராசப்ப கவிராயர் ஆகியோரின் ஓங்கிய கருத்து - மொழிவளம் - சிந்தனைப் போக்கு அனைத்திலும் மேலாய் ஒளிப்பவர் இவர்.

மனித இனத்திற்குச் சுவைபயக்கும் அனைத்து இலக்கியத் துறையிலும் சிறந்து விளங்கினாலும் பாடலின் திறத்தாலே வையத்தைப் பாலித்த - பாலிக்கும். உயர் இடம் பெற்றிருப்பவர்.

பல்லாயிரக் கணக்கான மக்களின் வெளியிட முடியாத உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் புத்தம் புதிய உவமைகளாலும் உருவகங்களாலும் கருத்தூற்றை மலையூற்றாய்த் தருபவர். மாந்த இனத்தின் இயற்கை அழகுயிர்ப்பையும் இனிய துன்பங்களையும் எல்லா வகை இலக்கியங்களிலும் வியப்புற வெளிப்படுத்துகிறவர்.

இயற்கை - காதல் - வாழ்க்கை ஆகிய முக்கோணத்தில் மனித நல நாட்டத்தையே மன வெழுச்சியில் வான் மழையை - நிலச் செழிப்பை - தீச்சுடரை - நாற்றிசைக் காற்றினை மொழியில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று விழைந்து தருபவர்.