பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


, நண்பனே, உன் உடல் இறைவனின் இசைக் கருவி அதன் தந்திகளை முறுக்கி அதனிடமிருந்து தனது இன்னிசையை எடுத்துக் கொள்கிறான்.

-க.ப

விதையின் தளையிலிருந்து விடுபட்டு முன்பின் தெரியாத இடத்தினூடே வீரச்செயல்களைத் தேடிச் செல்லும் சிறகு படைத்த உயிர்தான் மரம்.

- மின்

டலைக் கடப்பது போன்றது. இந்த மனித வாழ்க்கை; அங்கு நாம் யாவரும் குறுகலான கப்பலில் சந்தித்துக் கொள்கிறோம்.

-ப.ப

நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்வதற்காகவே இறைவன் நம்மை தவிர்க்கிறான். தன் நெஞ்சத்தில் நெருக்கமாக வைத்துக் கொள்வதற்காகவே, தன்னைத் தானே ஆன்மாவில் அர்ப்பணித்துக் கொள்கிறான்.

- மின்

திகாரப் பேரரசில் அடக்கி நொறுக்கியே நாம் முன்னேறுகிறோம். ஆனால் அன்புப் பேரரசில் ஆசையை வெறுத்து ஒதுக்கியே நாம் முன்னேறுகிறோம்.

- எ.எ.