பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெள்ளிய நடையும் சீரிய பொருளும் வீறிய சிந்தனையையும் எவரும் வாழ்வியக்கத்தில் பெற்று மகிழச் செய்யும் அறிவின் ஒளியும் புதுப்புது சொல்லாட்சியும் சொற் செட்டும் கூரிய சீரிய சிந்தனைத் திட்டமும் ஒளிரச் செய்பவர்.

ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களையும், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இன்னிசையின் பண் சுமந்த பாடல்களையும் தீட்டியுள்ளவர். உள்ளத்தில் ஆழ்ந்த படிப்பறிவையும் பட்டறிவையும் சிறுகதை, புதினம், நாடகங்கள் எனப் பன்முக இலக்கியமாகத் தந்துள்ளவர்.

உலக முழுதும் சுற்றிச் சுற்றி சொற்பொழிவுகள் ஆற்றி ‘சாந்தினிகேதன்’ பல்கலைக்கழகம் அமைத்தவர். உலக மக்கள் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் ஊட்டமளிக்கும் அவர் மொழியோவியங்கள் சொற் சிற்பங்களும் என்றும் அழியாதவை. அவற்றை நுகர்க.

- தி. ஸ்ரீனிவாசராஜகோபாலன்