பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

63


ப்பலில் இருக்கும் நீர் பளபளக்கிறது. கடலில் உள்ள நீர் கருமை படர்ந்திருக்கிறது.சின்னஞ் சிறிய உண்மைச் சொற்கள் தெளிவாக உள்ளன. பேருண்மையில் அமைதியே குடி கொண்டுள்ளது.

-ப.ப

லியாகிற நெருப்பை அணைப்பதன் மூலம் மனிதன் நலம் பெறுகிறான். நெருப்பின் மேல் ஆட்சி செய்தவன் மூலம், அவன் அறிவொளியை ஏற்றி வைக்கிறான்.

- எ.எ

ன் அன்பிற்குரியவர்களுக்கென நான் விட்டுச் செல்வது சிறிய பொருள்களையே. பெரிய பொருள்கள் யாவருக்கும் உரியவை.

-ப.ப

ருட்டில் குமைந்து கொண்டிருக்கும் என் கொண்டல்களே, ஒன்றை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். செஞ்சுடரை மறைத்தது நீங்கள் தானே.

-மின்

பெண்ணே, நிலத்தைக் கடல் குழ்ந்துள்ளது போல், ஆழமான உன் கண்ணின் வாயிலாக உலகின் நெஞ்சத்தை நீ சூழ்ந்திருக்கிறாய்.

-ப.ப